மூடுக

மாவட்ட ஆட்சியா் சுருக்கக்குறிப்பு

டாக்டர் கீ.சு.சமீரன், இ.ஆ.ப.

District Collector's imageதென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட நீதிபதி டாக்டர் கீ.சு. சமீரன், இ.ஆ.ப. அவர்கள் இந்திய ஆட்சிப் பணி 2012 வருடத்தை சார்ந்தவர். அவர் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவமும், தில்லி தேசிய சட்ட பல்கலை கழகத்தில் நகர சுற்றுச் சூழல் மேலாண்மை மற்றும் சட்டத்தில் முதுகலை பட்டய படிப்பும் படித்திருக்கிறார். பரமக்குடியில் சார்-ஆட்சியராகவும், ராமநாதபுரத்தில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) ஆகவும், பால்க் வளைகுடா  திட்ட இயக்குநர் (மீன்வளத்துறையின் கூடுதல் இயக்குநர் ஆகவும், தமிழ்நாடு மீன் வளத்துறையின் மீன் வளத்துறை இயக்குநர் மற்றும் மேலாண் இயக்குநர் எனவும்  பணியாற்றியிருக்கிறார்.  நில மேலாண்மை, பேரிடர் மேலாண்மை, திட்டங்கள் மேலாண்மை, மின்-ஆளுமை,  பொதுத் துறை நிறுவன மேலாண்மை மற்றும் வளர்ச்சி,  பொது சுகாதாரம், ஊரக வாழ்வாதாரம், அரசு பங்கேற்பு மற்றும் கலாச்சார சுற்றுலா போன்ற துறைகளில் ஒரு ஆட்சித் தலைவராக மிகுந்த நாட்டமுடையவர். இவர் ஒரு எழுத்தாளரும் கூட.