நான்காவது பொதிகை புத்தகத் திருவிழா – 2026
அறிவே அற்றங் காக்கும் கருவி என்ற அய்யனின் வரிகளுக்கு இணங்க, சமூகத்தை ஏற்றத்தாழ்வுகள் இல்லாத நிலைக்கு உயா்த்திட, அறிவாா்ந்த எதிா்காலத்தை நிறுவிட நம் அனைவருக்கும் புத்தக வாசிப்பு இன்றியமையாதது.எனவே இங்கு குழந்தைகள் முதல் பொியவா்கள் வரை குறிப்பாக மாணவ, மாணவியா்களிடையே வாசிப்பின் அவசியத்தையும் அதன் மூலம் விளையும் பயன்களையும் கொண்டு சோ்க்க தமிழ்நாடு அரசு ஒரு முன் மாதிாி மாநிலமாக புத்தக வாசிப்பினை மக்கள் இயக்கமாக எடுத்துச்செல்கிறது. சென்னை புத்தகத் திருவிழா போன்ற விழாக்களை மாவட்டங்கள் தோறும் முன்னெடுத்து நடத்திட அறிவுறுத்தியுள்ளது.இதன் மூலம் தொண்மையான மொழி வரலாறும், பெரும் இலக்கிய செழுமையும், சங்கம் முதல் இன்றுவரை தொடரும் இலக்கிய மரபையும் கொண்ட நம் தமிழ் மொழியைக் கொண்டாடும் வாய்ப்பாக இத்தகைய புத்தக திருவிழாக்கள் அமையும் என்று தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்போில், தென்காசியில் நான்காவது முறையாக மாவட்ட நிா்வாகமும், தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கமும் இணைந்து, தென்காசியில் அமைந்துள்ள இ. சி. ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 30.01.2026 முதல் 08.02.2026 வரை இப்புத்தகத் திருவிழாவை நடத்துகின்றன.
